Published : 17 Jan 2018 09:16 AM
Last Updated : 17 Jan 2018 09:16 AM

தடையை மீறி விற்கப்பட்ட 431 கிலோ இறைச்சி பறிமுதல்

திருவள்ளுவர் தினம் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு அனைத்து இறைச்சி கூடங்களும் மூடப்பட வேண்டும் என்று சென்னை மாநகராட்சி மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. எனவே பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 2,689 இறைச்சி கடைகளில், 2,669 கடைகள் மூடப்பட்டிந்தன.

ஆனால், தேனாம்பேட்டை, அண்ணாநகர், திருவிக நகர், கோடம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் 20 இறைச்சி கடைகள் திறந்திருந்தது மாநகராட்சி அதிகாரிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து, அங்கு விற்கப்பட்ட சுமார் 431 கிலோ இறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x