Published : 09 Nov 2023 06:47 AM
Last Updated : 09 Nov 2023 06:47 AM

சென்னை | மகாவீர் நிர்வான் தினத்தை முன்னிட்டு நவ.13-ல் இறைச்சி கூடங்களுக்கு விடுமுறை

சென்னை: சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாநகராட்சி பொதுசுகாதாரத்துறை (கால்நடை மருத்துவப் பிரிவு) கட்டுப்பாட்டில் புளியந்தோப்பு, வில்லிவாக்கம், சைதாப்பேட்டை உள்ளிட்ட 4 இடங்களில் இறைச்சிக் கூடங்கள் இயங்கி வருகின்றன. வரும் 13-ம் தேதி மகாவீர் நிர்வான் நாளை முன்னிட்டு அரசு உத்தரவின்படி அந்த 4 இறைச்சிக் கூடங்களும் மூடப்படுகின்றன.

இதேபோல், ஜெயின் கோயில்களிலிருந்து 100 மீட்டர் சுற்றளவில் உள்ள இறைச்சி கடைகளும் மூடப்பட்டு, இறைச்சி விற்பனை தடை செய்யப்படுகிறது. இந்த உத்தரவை செயல்படுத்த ஒத்துழைப்பு வழங்குமாறு வியாபாரிகளிடம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x