Published : 02 Jan 2018 10:20 AM
Last Updated : 02 Jan 2018 10:20 AM

சென்னை மாநில கல்லூரி அருகே எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு: ரூ.2.52 கோடியில் பொதுப்பணித்துறை அமைக்கிறது

சென்னை மாநிலக் கல்லூரி அருகே பொதுப்பணித்துறை சார்பில் ரூ.2 கோடியே 52 லட்சம் செலவில் எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு அமைக்கப்பட உள்ளது.

தமிழக அரசு சார்பில் கடந்த ஆண்டு மாவட்டங்கள் தோறும் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடத்தப்பட்டது. அதன் ஒரு பகுதியாக மெரினா கடற்கரை அருகில், காமராஜர் சாலையில் பொதுப்பணித்துறை வளாகம் மற்றும் சென்னை மாநிலக் கல்லூரி இடையே ரூ.2 கோடியே 52 லட்சம் செலவில் எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு அமைக்க பொதுப்பணித்துறை திட்டமதிப்பீடு தயாரித்துள்ளது.

எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு அமைக்கப்பட உள்ள காமராஜர் சாலை சென்னை மாநகராட்சி பராமரிப்பில் இருப்பதால், அதனிடம் தடையின்மை சான்று கோரி பொதுப்பணித்துறை விண்ணப்பித்திருந்தது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

எம்ஜிஆர் நினைவு வளைவு அமைக்க, மாநகராட்சி சார்பில் தடையின்மை சான்று வழங்க அரசின் அனுமதி வேண்டி மாநகராட்சின் நிலம் மற்றும் உடைமைத் துறை சார்பில் அரசுக்கு கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. அரசின் உத்தரவு கிடைத்த பின்னர் மாநகராட்சியால் தடையின்மைச் சான்று வழங்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x