Published : 10 Jan 2018 09:28 AM
Last Updated : 10 Jan 2018 09:28 AM

708 அரங்குகள், 10 லட்சம் புத்தகங்களுடன் சென்னை புத்தகக் காட்சி இன்று தொடக்கம்: 22-ம் தேதி வரை நடக்கிறது

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) நடத்தும் 41-வது புத்தகக் காட்சி இன்று தொடங்குகிறது. இந்த புத்தகக் காட்சி 22-ம் தேதி வரை நடக்கிறது.

பபாசி அமைப்பு கடந்த 40 ஆண்டுகளாக சென்னையில் பிரம்மாண்டமான புத்தகக் காட்சியை நடத்தி வருகிறது. இந்தாண்டு 41-வது புத்தகக் காட்சி கீழ்பாக்கத்தில் பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் இன்று தொடங்குகிறது. இந்த புத்தகக் காட்சி வரும் 22-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதுகுறித்து பபாசி தலைவர் வயிரவன், செயலர் ஏ.ஆர்.வெங்கடாசலம், பொருளாளர் டி.எஸ். சீனிவாசன் ஆகியோர் கூறிய தாவது:

சுமார் 1.60 லட்சம் சதுர அடி பரப்பளவில் 708 அரங்குகளுடன் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள புத்தகக் காட்சியை தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் 10-ம் தேதி (இன்று) மாலை 5 மணிக்கு தொடங்கி வைக்கிறார். தொழிலதிபர்கள் நல்லி குப்புசாமி, எம்.ஏ.எம்.ஆர்.முத்தையா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர். வார நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் புத்த கக் காட்சி நடைபெறும்.

10 சதவீத தள்ளுபடி

புத்தகக் காட்சியில் புத்தகங்களுக்கு 10 சதவீத கழிவு வழங்கப்படும். நுழைவுக் கட்டணமாக ரூ.10 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 12 வயதுக்கு குறைவான குழந்தை களுக்கு அனுமதி இலவசம். புத்தகக் காட்சி நடக்கும் பள்ளி வளாகத்தில் கார்கள், இருசக்கர வாகனங்களை நிறுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. அதற்கு மேல் வாகனங்கள் வந்தால் பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் அவற்றை நிறுத்தலாம்.

புத்தகக் காட்சி வளாகத்தில் பணம் பெற 2 ஏடிஎம் இயந்திரங் களும், பணம் செலுத்த 15 இடங்களில் டெபிட், கிரெடிட் கார்டு ஸ்வைப்பிங் செய்துகொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. வாசகர்கள் பயன்படுத்தும் வித மாக இலவச வைஃபை வசதி செய்யப்பட்டுள்ளது.

திருவள்ளுவர் சிலை

புத்தகக் காட்சி நடைபெறும் அனைத்து நாட்களிலும் பல்வேறு துறை நிபுணர்கள் பங்கேற்கும் சொற்பொழிவுகள், மாணவர் களுக்கான போட்டிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாசகர்கள் - எழுத்தாளர்கள் சந்திப்புக்காக தனி அரங்கு ஒதுக்கப்பட்டுள்ளது. புத்தகக் காட்சி அரங்கில் வாசகர்களைக் கவரும் வண்ணம் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அந்தச் சிலையை தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் க.பாண்டியராஜன் திறந்து வைக்கிறார்.

இளம் குறும்பட, ஆவணப்பட இயக்குநர்களை ஊக்குவிக்கும் வண்ணம் அவற்றை திரையிட புத்தகக் காட்சி வளாகத்தில் தனி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது., பாரம்பரிய இசையைப் போற் றும் வகையில் இசைக் கலைஞர்கள் பங்கேற்கும் நிகழ்வும் நடைபெற உள்ளது. புத்தகக் காட்சி நிறைவு விழாவில் உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் கலந்துகொண்டு பதிப் புத் துறையில் 25 ஆண்டு கள் சேவை செய்தவர்களுக்கு விருது வழங்குகிறார்.

ரோபோ அறிமுகம்

முதன்முறையாக இந்தாண்டு எந்த அரங்கில் எந்த புத்தகம் உள்ளது என்பதை ரோபோ மூலம் அறிந்துகொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் தாங்கள் விரும்பும் புத்தகம் உள்ள அரங்கை தேடி அலைய வேண்டியதில்லை. அந்த ரோபோவை பார்த்து அரங்குக்கு நேரடியாகப் போய் புத்தகம் வாங்கிக் கொண்டு நேரத்தை மிச்சப்படுத்தலாம். புத்தகக் காட்சி குறித்த கூடுதல் விவரங்களை www.bapasi.com என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x