Published : 28 Jan 2018 09:24 AM
Last Updated : 28 Jan 2018 09:24 AM
அரசு பஸ் கட்டண உயர்வு காரணமாக ரயிலில் டிக்கெட் எடுக்க கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. கோடை சிறப்பு ரயில்களில் 75% டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்துள்ளன.
தமிழகத்தில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு அரசு பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வு கடந்த 20-ம் தேதி முதல் அமலானது. சராசரியாக 55 முதல் 60% வரையில் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால், ஆயிரக்கணக்கானோர் ரயில் பயணத்துக்கு மாறி வருகின்றனர். இதனால் ரயில்களில் டிக்கெட் எடுக்க கடும் போட்டி நிலவுகிறது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவர் கூறும்போது, “பஸ் கட்டண உயர்வுக்குப் பிறகு, ரயில்களில் பயணிப்போரின் எண்ணிக்கை சுமார் 30% அதிகரித்துள்ளது. அறிவிக்கப்படும் சிறப்பு ரயில்களிலும் உடனுக்குடன் டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்து விடுகின்றன. குறிப்பாக, சமீபத்தில் சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், சென்னை சென்ட்ரலில் இருந்து எர்ணாகுளம், மங்களூர் உட்பட மொத்தம் 28 சிறப்பு ரயில்கள் ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களில் இயக்கப்படும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த சிறப்பு ரயில்களில் டிக்கெட் பெற பொதுமக்கள் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தற்போதைய நிலவரப்படி 70% டிக்கெட்கள் விற்று தீர்ந்துவிட்டன’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT