தீபாவளியை முன்னிட்டு ரேஷன் கடைகள் ஞாயிறன்று திறந்திருக்கும்

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: தீபாவளியை முன்னிட்டு, ரேஷன்கடைகள் வரும் ஞாயிறன்று இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவுத்துறை மற்றும் கூட்டுறவுத்துறைகள் சார்பில் தமிழகம் முழுவதும் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் பொதுமக்கள் வசதிக்காக திறந்திருக்கும் நாட்களில் சில மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, குறிப்பிட்ட அளவிலான கடைகள், வாரத்தின் முதல் 2 வெள்ளிக்கிழமைகள் மூடப்பட்டு, அதற்குப்பதில் அந்த வாரத்தின் ஞாயிற்றுக்கிழமைகள் திறந்திருக்கும். இவைதவிர மற்ற கடைகள், ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்காது. இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமைகள் மூடப்படும் ரேஷன் கடைகளை இந்த வாரம் திறந்து பொருட்களை வழங்க உணவு மற்றும்கூட்டுறவுத்துறைகள் உத்தரவிட் டுள்ளன.

மேலும், கடைகளில் அனைத்து பொருட்களையும் இருப்பு வைத்து, விடுதல் இன்றி வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in