Published : 01 Jan 2018 10:39 AM
Last Updated : 01 Jan 2018 10:39 AM
புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்வது உள்ளிட்ட 11 அம்ச கோரிக்ககைளை வலியுறுத்தி ஜனவரி 6-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் தொடர் முழக்க போராட்டம் நடத்த ஜாக்டோ-ஜியோ முடிவு செய்துள்ளது.
தமிழ்நாடு அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் சென்னையில் உள்ள தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சங்க அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா. தாஸ், மு.அன்பரசு ஆகியோர் தலைமை தாங்கினர்.
இந்த கூட்டத்தில், ஜனவரி 6-ம் தேதி அன்று பங்களிப்பு ஓய்வூதிய திட்ட ரத்து அறிக்கையை வெளியிடுவது, பொங்கல் போனஸ் உள்பட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரில் காலை மணி 10 முதல் 1 மணி வரை தொடர் முழக்க போராட்டம் நடத்துவது. ஜனவரி 9, 10-ம் தேதிகளில் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள், சட்டமன்ற கட்சி தலைவர்கள் மற்றும் அமைச்சர்களை சந்திப்பது, பிப்ரவரி 4-ம் தேதி சென்னையில் புதிய பென்சன் திட்ட ஒழிப்பு கருத்தரங்கம் நடத்துவது, ஜனவரியில் மதுரையில் நடைபெற உள்ள உயர்மட்டக்குழு கூட்டத்தில் தொடர் மறியல் போராட்டத் தேதியை அறிவிப்பது என்பன உள்பட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT