Published : 29 Oct 2023 04:15 AM
Last Updated : 29 Oct 2023 04:15 AM

தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: மாலத்தீவு கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழகத்தை சேர்ந்த 12 மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் விடுவிக்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளம் மீன் இறங்குதளத்தில் இருந்து கடந்த 1-ம் தேதி புறப்பட்ட விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 12மீனவர்கள், கடந்த 23-ம் தேதிதினாது தீவு அருகே மாலத்தீவு கடலோரக் காவல் படையினரால் எந்தவித முன்னெச்சரிக்கையும் இன்றி கைது செய்யப்பட்டுள்ளனர்.

உரிய தூதரக நடவடிக்கைகள் மூலம், மாலத்தீவு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கைது செய்யப்பட்டுள்ள 12 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவித்திட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x