Published : 25 Jan 2018 10:19 AM
Last Updated : 25 Jan 2018 10:19 AM

தாயை கொன்ற மகன் சரண்

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் சி.கே.மாணிக்கனார் தெருவைச் சேர்ந்தவர்கள் வேணு (80), லட்சுமி (75) தம்பதியினர். இவர்களுக்கு குமார் (30), முருகன் (28) ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.

முருகன் மது, கஞ்சா பழக்கம் உள்ளவர். இவர் மது குடிக்க தன் பெற்றோருக்கு வரும் முதியோர் உதவித் தொகையை கேட்டு தொல்லை கொடுத்து வந்தார். இந்நிலையில், கடந்த 19-ம் தேதி தந்தை வேணு உயிரிழந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு போதையோடு வீட்டுக்கு வந்த முருகன், பணம் கேட்டு தன் தாய் லட்சுமியிடம் தகராறு செய்துள்ளார். அப்போது, ஏற்பட்ட வாக்குவாதத்தால் கோபமடைந்த முருகன், தாயை கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டார்.

இதுகுறித்து செங்குன்றம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய முருகனை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், நேற்று மதியம் நாரவாரிக்குப்பம் கிராம நிர்வாக அலுவலர் பரக்கத் உசேனிடம் முருகன் சரணடைந்தார். பின்னர், செங்குன்றம் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட முருகனிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x