

சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை அக்.31-ல் கூடுகிறது.
தமிழக தொழில் துறை சார்பில் சென்னையில் வரும் 2024 ஜன.7, 8-ல்உலக முதலீட்டாளர் மாநாடு நடக்க உள்ளது. இதற்கிடையே தமிழகத்தில் முதலீடு செய்ய பல்வேறு நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்து ஒப்பந்தம் மேற்கொள்ள தயாராக உள்ளன.
இந்நிலையில் தமிழக அமைச்சரவை வரும் அக்.31 -ம் தேதி மாலை 6.30 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கூடுகிறது. இதில், புதிய முதலீடுகள் குறித்து விவாதிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது. ஆளுநர் மாளிகையில் நடந்த பெட்ரோல் குண்டுவீச்சு விவகாரம் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.