

கோவை: சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,
“திருவனந்தபுரம் - செகந்திரா பாத் இடையே இயக்கப்படும் சபரி எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:17229), செகந்திரா பாத் - திருவனந்தபுரம் இடையே இயக்கப்படும் சபரி எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:17230) ஆகியவை வரும் 2024 ஜனவரி 1-ம் தேதி முதல் வடக்கன் சேரி ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.
மேலும், திருவனந்தபுரம் - செகந்திரா பாத் இடையே இயக்கப்படும் சபரி எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:17229) தற்போது கோவைக்கு மாலை 4.32 மணிக்கு வந்தடைந்து, 4.35 மணிக்கு புறப்பட்டுச் செல்கிறது. இந்த ரயில், வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் பிற்பகல் 3.52 மணிக்கு வந்தடைந்து, 3.55 மணிக்கு புறப்பட்டுச் செல்லும்.
திருப்பூருக்கு மாலை 4.43 மணிக்கு சென்றடைந்து, 4.45 மணிக்கு புறப்பட்டுச் செல்லும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.