Published : 08 Jan 2018 09:03 AM
Last Updated : 08 Jan 2018 09:03 AM

அரசு பஸ்கள் மீது தாக்குதல் நடத்தினால் கடும் நடவடிக்கை: காவல் ஆணையர் எச்சரிக்கை

அரசு பஸ்கள் மீது தாக்குதல் நடத்தியதாக சென்னையில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பஸ்கள் மீது தாக்குதல் நடத்தினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரித்துள்ளார்.

ஊதிய உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் போலீஸ் பாதுகாப்புடன் பல்வேறு இடங்களில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. போராட்டத்தை மீறி போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்படும் அரசு பஸ்கள் மீது சில இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

சென்னையில் கோயம்பேடு, மதுரவாயல், அண்ணாநகர், கொடுங்கையூர், எம்.கே.பி.நகர் உள்ளிட்ட இடங்களில் அரசு பேருந்துகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

7 பேர் கைது

இது தொடர்பாக மதுரவாயல் சுரேஷ் (25), திருப்பத்தூர் மகாலிங்கம் (30), கோகுலகிருஷ்ணன் (51), அண்ணாநகர் மேற்கு பணிமனையில் பணியாற்றும் புகழேந்தி (46), வியாசர்பாடி பாஸ்கர் (47), மணிகண்டன் (21), சதீஸ் குமார் (19) ஆகிய 7 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்த தாக்குதலைத் தொடர்ந்து, இயக்கப்படும் அரசு பேருந்துகளுக்கு முழு பாதுகாப்பு அளிக்க சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். மேலும், பேருந்துகள் மீது தாக்குதல் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x