

சென்னை: சென்னையில் 12 உதவி ஆணையர் உட்பட தமிழகம் முழுவதும் 37 டிஎஸ்பிக்கள் பணியிடம் மாற்றப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் கடந்த 11-ம்தேதி 12 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 16 போலீஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் 37 டிஎஸ்பிக்கள் தற்போது பணியிடம் மாற்றப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை நீலாங்கரை காவல் சரக உதவி ஆணையராக இருந்த சுதர்சன் தி.நகருக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அதேபோல், மணலியில் இருந்த தட்சிணாமூர்த்தி பூக்டைக்கும், தஞ்சையில் இருந்த சரண்யா சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த கலியன் சென்னை பாதுகாப்பு பிரிவுக்கும், செங்கல்பட்டிலிருந்த பரத், நீலாங்கரைக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் உட்பட சென்னையில் 12 காவல் உதவி ஆணையர்கள் மாற்றலாகி, அவர்கள் இடத்தில் புது அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை டிஜிபி சங்கர் ஜிவால் பிறப்பித்துள்ளார்.