தியாகி சங்கரலிங்கனார் நினைவுநாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

தியாகி சங்கரலிங்கனார் நினைவுநாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
Updated on
1 min read

சென்னை: தமிழகம் என்ற இந்த மாநிலம்உள்ள மட்டும் தியாகி சங்கரலிங்கனார் நினைவுகூரப்படு வார் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

தியாகி சங்கரலிங்கனாரின் நினைவு தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது:

அக்டோபர் 13-ம் தேதி விருதுநகர் சங்கரலிங்கனார் நினைவு தினம். வீரத்தியாகியின் நினைவு நமக்கு உள்ளத்தூய்மையை, உறுதியை, தியாக சுபாவத்தைத் தருவதாக அமைய வேண்டும். ‘தியாகிக்குத் தலை வணங்குவோம். தியாகத்துக்குப் பணிபுரிவோம்’ என்றார் பேரறிஞர்அண்ணா. தமிழகம் என்ற இந்த மாநிலம் உள்ள மட்டும் தியாகி சங்கரலிங்கனார் நன்றியோடு நினைவுகூரப்படுவார். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in