Published : 11 Oct 2023 09:37 PM
Last Updated : 11 Oct 2023 09:37 PM

தமிழகம் முழுவதும் 16 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

சென்னை: தமிழகத்தில் 16 ஐபிஎஸ் அதிகாரிகளை ஒரே நேரத்தில் பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் முதன்மை செயலாளர் அமுதா ஐஏஎஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

  • சிவில் சப்ளை சிஐடி பிரிவு டிஜிபி வன்னிய பெருமாள், ஊர்காவல் படை டிஜிபியாக பணியிட மாற்றம்.
  • சென்னை காவல் பயிற்சி கல்லூரி ஐஜி தமிழ்சந்திரன் ஐபிஎஸ் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய செயலாளராக நியமனம்.
  • தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய செயலாளராக இருந்த பி.கே.செந்தில்குமாரி, சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக நியமனம்.
  • சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக இருந்த மகேஸ்வரி ஐபிஎஸ், திருநல்வேலி காவல் ஆணையராக நியமனம்.
  • சிவில் சப்ளை சிஐடி பிரிவு ஐஜியாக ஜோஷி நிர்மல்குமார் ஐபிஎஸ் நியமனம்.
  • காத்திருப்பு பட்டியலில் இருந்த தீஷா மிட்டல் ஐபிஎஸ், சென்னை தொழில்நுட்ப சேவைகள் பிரிவுக்கு டிஐஜியாக நியமனம்
  • சென்னை வடக்கு, சட்டம் - ஒழுங்கு காவல் இணை ஆணையராக அபிஷேக் தீட்சித் நியமனம்
  • பி.சாமூண்டீஸ்வரி, சென்னை டிஜிபி காவல்துறை தலைமையகத்தின் டிஐஜியாக நியமனம்
  • திருவாரூர் மாவட்ட எஸ்.பியாக இருந்த டி.பி.சுரேஷ்குமார், தென்காசி மாவட்ட எஸ்.பியாக நியமனம்
  • தென்காசி மாவட்ட எஸ்.பியாக இருந்த இ.டி.சாம்சன் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு சிஐடியாக நியமனம்
  • திருவாரூர் மாவட்ட எஸ்.பியாக ஜெயக்குமார் ஐபிஎஸ் நியமனம்
  • இ.சுந்தரவதனம்,கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பியாக நியமனம்
  • டி.என்.ஹரி கிரண் பிரசாத், கடலோர பாதுகாப்பு படை எஸ்.பியாக நியமனம்(ராமநாதபுரம்)
  • பி.சுந்தரவடிவேல் நீலகிரி மாவட்டம் எஸ்.பியாக நியமனம்
  • சென்னை டிஜிபி தலைமையக எஸ்.பியாக தீபா சத்யன் நியமனம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x