Published : 13 Dec 2017 10:48 AM
Last Updated : 13 Dec 2017 10:48 AM

காங். தலைவர் ராகுலுக்கு தலைவர்கள் வாழ்த்து

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்துள் ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கை வருமாறு:

தேமுதிக தலைவர் விஜயகாந்த்: காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியை தேர்ந்தெடுத்ததற்கு தேமுதிக சார்பாக பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். ராகுல் காந்தி காங்கிரஸூக்கு புகழை சேர்த்திட வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு நல்வாழ்த்துகளை தெரிவித்து்்கொள்கிறேன். ராகுல் காந்தியின் தலைமையின் கீழ் காங்கிரஸ் மேன்மையடைய வாழ்த்துகிறேன்.

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்: காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இதன்மூலம் காங்கிரஸ் கட்சியினரின் எதிர்பார்ப்பு நிறைவு செய்யப்பட்டிருக்கிறது. இதுவரை காணாத அளவில் தேசிய அளவில் வகுப்புவாத சக்திகளால் மிகப்பெரிய அச்சுறுத்தல் சூழ்ந்த காலத்தில் இந்த பொறுப்பை அவர் ஏற்றிருக்கிறார். ராகுல் காந்திக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

விசிக தலைவர் திருமாவளவன்: காங்கிரஸ் கட்சிக்குத் தலைமை ஏற்றிருக்கும் ராகுல்காந்தி மதச்சார்பற்ற சக்திகளை ஓரணியில் திரட்டி வகுப்புவாதிகளிடமிருந்து இந்த நாட்டை மீட்டெடுக்க வேண்டுமென வாழ்த்துகிறேன்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா: காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். வணிகர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட அரசியல் ரீதியாக ராகுல் காந்தி பங்களிப்பை அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x