Published : 15 Dec 2017 11:37 AM
Last Updated : 15 Dec 2017 11:37 AM

கொளத்தூர் நகைக்கடை கொள்ளை வழக்கு: கொள்ளையன் தினேஷ் சவுத்ரி சிக்கினான்

கொளத்தூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் கொள்ளையன் தினேஷ் சவுத்ரி சிக்கினான்.

சென்னையில் இருந்து ராஜஸ்தான் சென்ற இணை ஆணையர் சந்தோஷ்குமார், இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தை நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பாலி மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் ஜோதி ஸ்வரூப் தலைமையில் ஜெய்தாரன் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பிச் சென்ற கொள்ளையர்களில் ஒருவரான தினேஷ் சவுத்ரி கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜோத்பூரில் பதுங்கியிருந்த அவரை ராஜஸ்தான் போலீஸார் நேற்றிரவு சுற்றிவளைத்துப் பிடித்தனர். நாதுராமை பிடிக்க 4 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு ராஜஸ்தான் முழுவதும் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x