Published : 23 Dec 2017 10:03 PM
Last Updated : 23 Dec 2017 10:03 PM
ஜம்மு காஷ்மீரில் நிகழ்ந்த பனிச்சரிவில் எதிர்பாராதவிதமாக உயிரிழந்த என்.மூர்த்தியின் குடும்பத்திற்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஸ்டாலின் இன்று வெளியிட்ட இரங்கல் செய்தியில், ''கரூர் மாவட்டம், கொசூர் அடுத்துள்ள நதிபடியை சேர்ந்த ராணுவ வீரர் என்.மூர்த்தி ஜம்மு காஷ்மீரில் நிகழ்ந்த பனிச்சரிவில் எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார் என்பதை அறிந்து அதிர்ச்சியுற்றேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு திமுக சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
எல்லை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த நேரத்தில் உயிரிழந்துள்ள மூர்த்தியின் தியாக வாழ்வு, நாட்டின் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள தமிழக ராணுவ வீரர்களின் அரிய பங்களிப்பை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது'' என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT