Published : 19 Dec 2017 11:56 AM
Last Updated : 19 Dec 2017 11:56 AM

திருப்பூர் அருகே சாலை விபத்து: 4 இளைஞர்கள் பலி; பல்லடம் போலீஸார் விசாரணை

திருப்பூர் அருகே நேற்று (திங்கள்கிழமை) நள்ளிரவு நடந்த சாலை விபத்தில் 4 இளைஞர்கள் பலியாகினர்.

திருப்பூர் ராக்கியாபாளையத்தைச் சேர்ந்தவர் கார்த்திக்ராஜ். இவர் புதிதாக கார் ஒன்றை வாங்கியுள்ளார். புதிய காரில் நண்பர்களுடன் வெளியூருக்குச் சென்று நேற்றிரவு ஊர் திரும்பிக்கொண்டிருந்தார். பல்லடம் நோக்கி கார் பயணித்தபோது எதிரே வந்த கன்டெய்னர் லாரியுடன் மோதியது. இதில், கார் நொறுங்கியது.

காரில் பயணம் செய்த 6 பேரில், கார்த்திக்ராஜ், அவரது சகோதரர் மாணிக்ராஜ், இவர்களது நண்பர்கள் அஜ்மீர், சரவணன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் இருவர் படுகாயமடைந்தனர். காயமடைந்த இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பாக பல்லடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x