சென்னை விமான நிலையத்தில் இணையதள பிரச்சினை: 20 விமானங்கள் புறப்படுவதில் தாமதம்

படம்: வேளாங்கண்ணி ராஜ்
படம்: வேளாங்கண்ணி ராஜ்
Updated on
1 min read

சென்னை: சென்னை விமான நிலையத்தில் இணையதள பிரச்சினையால் 20விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டன.இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். சென்னை சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான நிலையங்களிலிருந்து புறப்படும் விமானங்களில் பயணம் செய்யவரும் பயணிகளுக்கு போர்டிங் பாஸ்கள், அந்தந்த விமான நிறுவன கவுன்ட்டர்களில் கம்ப்யூட்டர்கள் மூலமாக வழங்குவார்கள். அந்த கம்ப்யூட்டர்கள் இயங்குவதற்கான இணையதளங்கள் நேற்று அதிகாலை 2 மணியில் இருந்து காலை 6 மணி வரைஇயங்கவில்லை.

இதனால் பயணிகளுக்கு போர்டிங் பாஸ்களை வழங்கமுடியவில்லை. அந்தந்த விமானநிறுவன கவுன்ட்டர்களில் உள்ள ஊழியர்கள், போர்டிங் பாஸ்களை கைகளால் எழுதிக் கொடுத்தனர்.

இதனால் ஒவ்வொரு கவுன்ட்டர்களிலும், நீண்ட வரிசையில் பயணிகள் காத்திருக்க வேண்டியது நிலை ஏற்பட்டது. இதனால் விமானங்களில் பயணிகள் ஏறுவதும் தாமதம் ஆகி, சென்னையிலிருந்து புறப்பட வேண்டிய அனைத்து விமானங்களும் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.

இதனால், துபாய், சார்ஜா,தோகா, அபுதாபி, லண்டன் உள்ளிட்ட 8 சர்வதேச விமானங்களும், அந்தமான், ஆமதாபாத், புனே, டெல்லி, தூத்துக்குடி, பெங்களூர் உள்ளிட்ட 12 உள்நாட்டு விமானங்களும் எனமொத்தம் 20 விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in