தமிழகத்தில் அக். 9 வரை மழைக்கு வாய்ப்பு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இன்று முதல் அக். 9-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னைமண்டல வானிலை ஆய்வு மையஇயக்குநர் பா.செந்தாமரைக்கண் ணன் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேகமாறுபாடு காரணமாக இன்று (அக். 4) முதல் வரும் 9-ம் தேதிவரை தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் ஓரிரு இடங்களில் லேசானதுமுதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் அக். 3-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பதிவானமழை அளவுகளின்படி அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோட்டில் 13 செ.மீ., நாகர்கோவிலில் 10 செ.மீ., கொட்டாரத்தில் 8 செ.மீ., அடையாமடை, அணைகெடங்கு, இரணியல், மயிலாடி உள்ளிட்ட பகுதிகளில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் இன்று மணிக்கு 55 முதல் 65 கி.மீ. வேகத்திலும், குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 55 கி.மீ. வேகத்திலும், தெற்கு கேரள கடலோரப் பகுதிகள் மற்றும்லட்சத்தீவு பகுதிகளில் மணிக்கு55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in