ஆளுநர் மாளிகை முற்றுகை: 870 பேர் மீது வழக்கு பதிவு

ஆளுநர் மாளிகை முற்றுகை: 870 பேர் மீது வழக்கு பதிவு
Updated on
1 min read

சென்னை: காவிரியில் தமிழகத்துக்கு உரிய நீரை தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. முன்னதாக சைதாப்பேட்டையில் தொடங்கிய பேரணிக்கு அக்கட்சி தலைவர் வேல்முருகன் தலைமை வகித்தார்.

போராட்டத்தில் பங்கேற்றவர்கள், கர்நாடக அரசையும், மத்திய அரசையும் கண்டித்து கோஷங்களை எழுப்பினர். மேலும், ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக சென்று முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்கள் அனைவரையும் கிண்டி போலீஸார் கைது செய்து அருகில் உள்ள மண்டபத்தில் தங்கவைத்தனர்.

மாலையில் அனைவரையும் விடுவித்தனர். இந்நிலையில், ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணி மற்றும் முற்றுகைபோராட்டம் நடத்திய தமிழக வாழ்வுரிமை கட்சியைச் சேர்ந்த 870 பேர் மீது கிண்டி போலீஸார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in