மின்சார ரயிலில் புகை கிளம்பியதால் பரபரப்பு

மின்சார ரயிலில் புகை கிளம்பியதால் பரபரப்பு
Updated on
1 min read

சென்னை: தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி பிற்பகல் 3.30 மணிக்கு மின்சார ரயில் புறப்பட்டது. இந்த ரயில் கிண்டி ரயில் நிலையம் அருகே வந்தபோது, மகளிர் பெட்டியில் திடீரென கரும்புகை ஏற்பட்டது. இதனால், பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக, ரயிலை ஓட்டுநர் நிறுத்தினார். ரயிலில் இருந்து இறங்கிய பயணிகள் பதறி ஓடினர்.

ரயில் ஓட்டுநர் மற்றும் ஊழியர்கள் அந்த பெட்டியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, மின்சார ரயிலின் பிரேக் பாயிண்ட்டில் ஏற்பட்ட பழுதுகாரணமாக, கரும் புகை வந்தது தெரியவந்தது. அவை சரி செய்யப்பட்ட பிறகு 15 நிமிடங்களுக்கு பின்னர் ரயில் புறப்பட்டது. இந்த சம்பவத்தால், கிண்டி ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in