பனை விதை நடும் பணிகளில் மாணவர்கள் ஈடுபட அறிவுறுத்தல்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: கல்லூரி கல்வி இயக்குநர் கோ.கீதா அனைத்து மண்டல இணை இயக்குநர்களுக்கு அனுப்பிய சுற்றிக்கை:

திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி வரையான கடற்கரை பகுதிகளில் 1,076 கி.மீ.க்கு ஒரு கோடி பனை விதைகளை விதைக்க இயக்கம் முடிவு செய்துள்ளது பனை விதைகளை சேகரித்தல், நடவு செய்தல் ஆகிய இரு சேவைகளில் மாணவர்கள் ஈடுபடலாம்.

இதற்காக ஒவ்வொரு கல்லூரியில் இருந்தும் 10 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் உடன் செல்ல அனுமதி வழங்க வேண்டும். இந்த பணிகளில் ஈடுபடும் மாணவர்கள் தங்கள் பெற்றோர் அனுமதி கடிதத்தை அவசியம் பெற்றாக வேண்டும். இதுபற்றி தேவையான அறிவுறுத்தல்களை அனைத்து கல்லூரிகளுக்கும் மண்டல இயக்குநர்கள் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in