Published : 12 Dec 2017 09:59 AM
Last Updated : 12 Dec 2017 09:59 AM

கூடங்குளம் முதல் உலையில் உற்பத்தி நிறுத்தம்

கூடங்குளம் முதல் அணு உலையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

கூடங்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தித் திறனுள்ள 2 அணு உலைகளில் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் 2 அணு உலைகளிலும் உச்ச மின் உற்பத்தி அளவான தலா ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு, மத்திய மின் தொகுப்பில் இணைக்கப்பட்டது. இது நாட்டில் உள்ள அணு மின் நிலையங்களிலேயே அதிகபட்ச மின் உற்பத்தி என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அணு மின் நிலைய வளாக இயக்குநர் எஸ்.வி.ஜின்னா கூறியதாவது:

கூடங்குளம் முதல் அணு உலையில் 10-ம் தேதி காலை 6.30 மணியளவில் டிரான்ஸ்மிஷன் லைனில் பழுது ஏற்பட்டது. இதனால், மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. சரிசெய்யும் பணி நடந்து வருகிறது. ஓரிரு நாளில் மின் உற்பத்தி தொடங்கப்படும். 2-வது அணு உலையில் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x