Published : 12 Dec 2017 08:32 AM
Last Updated : 12 Dec 2017 08:32 AM
இடைத் தேர்தல் வாக்குப் பதிவு வரும் 21-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதையொட்டி இந்த தொகுதி முழுவதும் சென்னை போலீஸார் 1,500 பேர் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.
அரசியல் கட்சியினர் பணம், பரிசு பொருட்களை கொடுத்து வாக்காளர்களை கவர்ந்து விடக்கூடாது என்பதற்காக வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக துணை ராணுவப்படை வீரர்கள் வட மாநிலங்களில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டு இருக்கின்றனர்.
2 தினங்களுக்கு முன்னர் 272 துணை ராணுவப்படை வீரர்கள் வெளிமாநிலங்களில் இருந்து சென்னை வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று 158 துணை ராணுவப்படை வீரர்கள் மத்திய பிரதேசத்தில் இருந்து ரயில் மூலம் சென்னை வந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT