Published : 02 Dec 2017 10:15 AM
Last Updated : 02 Dec 2017 10:15 AM

ரிசர்வ் வங்கியில் 526 அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் வரவேற்பு

இந்திய ரிசர்வ் வங்கியில் 526 அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்திய ரிசர்வ் வங்கி நாடு முழுவதிலும் உள்ள தனது அலுவலகங்களில் காலியாக உள்ள 526 அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தீர்மானித்துள்ளது. இதில், சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கியில் 10 இடங் கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பதாரர்கள் 2017 நவம்பர் 1-ம் தேதியன்று 18 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு அடிப்படை சம்பளமான ரூ.10,940 உடன் இதர படிகள் சேர்த்து ரூ.22,339 ஆக ஊதியம் வழங்கப்படும். கல்வித் தகுதியாக 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ.450. விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் அனுப்புவதற்கான கடைசி தேதி டிச. 7-ம் தேதியாகும். கூடுதல் விவரங்களுக்கு https://opportunities.rbi.org.in/ என்ற இணையதளத்தைப் பார்த்து அறிந்து கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x