Published : 04 Dec 2017 03:50 PM
Last Updated : 04 Dec 2017 03:50 PM

ராதாகிருஷ்ணன் சாலையில் விபத்து: மேம்பாலத்தின் மீது இரும்புத் தடுப்பில் பைக் மோதியதில் இன்ஜினீயர் பலி

 ஞாயிற்றுக்கிழமை இரவு ராதாகிருஷ்ணன் சாலையில் மோட்டார் வாகனத்தில் வந்த இளைஞர் பாலத்தின் மீது உள்ள இரும்புக் கம்பியில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.

சென்னை ஜெமினி பாலத்திலிருந்து காந்தி சிலை நோக்கி செல்லும் ராதாகிருஷ்ணன் சாலையில் நேற்றிரவு 11 மணி அளவில் நடந்த சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே இளைஞர் பலியானார்.

டிடிகே சாலையிலிருந்து காந்தி சிலை நோக்கி சென்ற இளைஞர் ராதாகிருஷ்ணன் சாலை மேம்பாலம் மீது பைக்கில் சென்றபோது எதிர்பாராத விதமாக பாலத்தில் உள்ள இரும்புக் கம்பி மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அளித்த புகாரை அடுத்து அடையார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து இளைஞரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில் விபத்தில் உயிரிழந்தது திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் வசிக்கும் அருணாச்சலம் என்பவரின் மகன் ராகுல் (22) என்பது தெரியவந்தது.

பொறியியல் பட்டதாரி இளைஞரான ராகுல் பாலத்தின் இடது புறம் உள்ள கம்பி மீது மோதியதில் பின்னந்தலையில் பலத்த காயம் ஏற்பட்டதில் உயிரிழந்துள்ளார்.

வேகமாகச் சென்றதால் தவறி விழுந்து விபத்து ஏற்பட்டதா அல்லது யாரேனும் இடித்ததால் கீழே விழுந்து ஏற்பட்டதா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இளைஞர் ஹெல்மட் போடாததே விபத்தில் உயிரிழந்ததற்கு முக்கிய காரணம் என போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x