ஒகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து 6 ஆயிரம் கன அடியாக உயர்வு

ஒகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து 6 ஆயிரம் கன அடியாக உயர்வு
Updated on
1 min read

தருமபுரி/மேட்டூர்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த19-ம் தேதி முதல் 21-ம் தேதிவரை விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் மட்டுமே நீர்வரத்து இருந்தது. இந்நிலையில், நேற்றுநீர்வரத்து சற்றே அதிகரித்துள்ளது.

நேற்று காலை அளவீட்டின்போது விநாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து பதிவானது. நேற்று முன்தினம் இரவுஒகேனக்கல் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்ததால், காவிரியில் நீர்வரத்து சற்றே அதிகரித்துள்ளதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேட்டூரில் 4,421 கனஅடி: மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 3,367 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 4,421 கனஅடியாக அதிகரித்தது. காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 6,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 38.19 அடியாகவும், நீர்இருப்பு 11.17 டிஎம்சியாகவும் இருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in