Published : 07 Dec 2017 09:06 PM
Last Updated : 07 Dec 2017 09:06 PM

கன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப் போகிறதா?- தமிழ்நாடு வெதர்மேன் மறுப்பு

கன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது, அதை கன்னியாகுமரி மக்கள் நம்பாதீர்கள் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியொட்ட பதிவில், ''ஒக்கி புயல் தாக்கிய கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், ராமநாதபுரத்தின் உள்மாவட்டங்களில் அடுத்த வரும் நாட்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிர்ஷ்டமிருந்தால், மதுரையில் கூட மழை பெய்யலாம்.

ஒக்கி புயல் தாக்கிய கேரளாவின் தென் பகுதியில் கூட நல்ல மழையை எதிர்பார்க்கலாம். வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வுமண்டலமாக மாறி ஒடிசா கடற்கரைக்கு அருகே நகர்ந்துவிட்டது. அந்த காற்று தென் மாநிலங்களுக்கு சாதகமாக இருப்பதால், மழை கிடைக்கும்.

கன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது, அதை கன்னியாகுமரி மக்கள் நம்பாதீர்கள். அங்கு மிதமான மழை பெய்யக்கூடும். அச்சப்படத் தேவையில்லை'' என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x