Published : 27 Dec 2017 10:55 AM
Last Updated : 27 Dec 2017 10:55 AM

சசிகலா புஷ்பாவுக்கு தொலைபேசியில் மிரட்டல்

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு தினகரன் வெற்றி பெற்றார். அவருக்கு அதிமுக எம்பியான சசிகலா புஷ்பா நேற்று முன்தினம் அடையாறில் உள்ள தினகரன் வீட்டுக்குச் சென்று நேரில் வாழ்த்து தெரிவித்து வந்தார்.

மேலும் தினகரனுடன் இணைந்து செயல்பட விரும்புவதாகவும் குறிப்பிட்டிருந்தார். பின்னர், தேனாம்பேட்டையில் உள்ள விடுதியில் அறை எடுத்து ஓய்வில் இருந்தார். அப்போது அவரது திருமங்கலம் வீட்டுக்கு தொலைபேசியில் தொடர்புகொண்ட மர்ம நபர் ஒருவர் "சசிகலா புஷ்பாவை ஒழுங்காக இருக்கச் சொல். தேவையில்லாமல் செயல்பட்டால் முகத்தில் ஆசிட் விசுவோம்" என்று மிரட்டியதாக வீட்டில் பணிபுரியும் பெண் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து சசிகலா புஷ்பா தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரைப் பெற்றுக் கொண்ட போலீஸார் இதை திருமங்கலம் போலீஸாருக்கு அனுப்பி வைத்தனர். மிரட்டல் குறித்து தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x