Published : 01 Dec 2017 12:25 PM
Last Updated : 01 Dec 2017 12:25 PM
தேசிய முற்போக்கு திராவிடக் கழக நிறுவனத் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் விஜயகாந்த் ஆண்டுக்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனைக்காக செல்வது வழக்கம்.
அதேபோல இந்த ஆண்டும் மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூரிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர் சென்றுள்ளார். நேற்றுமுன் தினம் (நவ.28) அவர் சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றார்.
இந்நிலையில், சிங்கப்பூரில் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் ட்விட்டரில் வைரலாகி வருகிறது. கிறிஸ்துமஸ் நெருங்கிவருவதால் அங்கு வைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட அலங்கார கிறிஸ்துமஸ் மரத்தின் கீழ் நின்று அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் உள்ளிட்ட சில புகைப்படங்கள் ட்விட்டரில் வெளியாகியுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT