

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலத்தில் மணி(65) என்பவர் பட்டாசு ஆலை நடத்தி வந்தார்.
நேற்று இந்த ஆலையில், கலா(38), மேரி சித்ரா(35), தூத்துக்குடி கண்ணன்(32) உள்ளிட்டோர் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திடீரென பட்டாசுகள் வெடித்துச் சிதறின. இதில் உரிமையாளர் மணி அந்த இடத்திலேயே உயிரிழந்தார். கலா, மேரி சித்ரா, கண்ணன் ஆகியோர் காயமடைந்தனர். அவர்கள் நாகை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். வாய்மேடு போலீஸார், மணியின் உடலை வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.