Published : 06 Dec 2017 07:08 PM
Last Updated : 06 Dec 2017 07:08 PM

பேனர் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை மீறிய அதிமுகவினர், அதிகாரிகள் மீது அவமதிப்பு வழக்கு: டிராபிக் ராமசாமிக்கு உயர் நீதிமன்றம் அனுமதி

உயிரோடு இருப்பவர்களின் புகைப்படங்கள் பேனர்களில் இடம்பெறக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவை மீறிய அதிமுகவினர், தமிழக அரசு மற்றும் காவல்துறைக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர டிராபிக் ராமசாமிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

அக்டோபர் 23-ம் தேதி நடந்த வழக்கு ஒன்றில் உயிருடன் இருப்பவர்கள் புகைப்படங்களை பேனரில் வைக்கக்கூடாது என்று நீதிபதி எஸ்.வைத்தியநாதன் உத்தரவிட்டார். இதனை எதிர்த்து சென்னை மாநகராட்சி தரப்பில் உடனடியாக மேல்முறையீடு செய்யபட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள், இடைக்கால உத்தரவு பிறப்பிக்காமல் வழக்கை நிலுவையில் வைத்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 5-ம் தேதி மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவு தினத்திற்காக நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் உயிருடன் இருப்பவர்களின் படங்களுடன் பேனர்கள் வைக்கப்பட்டிருந்ததாகவும், இதை தமிழக அரசோ, காவல்துறையோ, சென்னை மாநகராட்சியோ தடுக்கவில்லை என்பதால் அவர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர நீதிபதி வைத்தியநாதன் முன்னிலையில் டிராபிக் ராமசாமி முறையீடு செய்தார்.

இதனை ஏற்ற நீதிபதி, தமிழக அரசு, சென்னை மாநகராட்சி, காவல்துறை, பேனர் வைத்தவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர டிராபிக் ராமசாமிக்கு அனுமதியளித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x