Published : 08 Dec 2017 09:59 AM
Last Updated : 08 Dec 2017 09:59 AM

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேட்பு மனு தள்ளுபடி: தலைமை தேர்தல் அதிகாரியிடம் ஜெ.தீபா புகார்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தனது வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் ஜெ.தீபா நேற்று புகார் அளித்தார்.

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்து வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை தலைமை செயலகத்தில் நேற்று சந்தித்து ஜெ.தீபா புகார் அளித்தார்.

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேர்தல் அதிகாரியிடம் நான் கொடுத்த ஆவணங்களில் இருந்து எண்.26 ஆவணத்தை அகற்றியுள்ளனர். இதையே எனது வேட்பு மனுவை நிராகரித்ததற்கான காரணமாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. வேட்பு மனுவுடன் இணைத்துக் கொடுத்த ஒரு சில ஆவணங்களை வேண்டுமென்றே எடுத்துள்ளனர். அது யார் என்பது தெரியவில்லை. எனவே, இதுதொடர்பாக முறையாக விசாரணை நடத்த வேண்டும் என தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் புகார் தெரிவித்துள்ளேன். அவரும் இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டும் என தெரிவித்துள்ளார்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x