205 மீனவர் குடும்பத்துக்கு காப்பீடு: ரூ.4.10 கோடி ஒதுக்கீடு

205 மீனவர் குடும்பத்துக்கு காப்பீடு: ரூ.4.10 கோடி ஒதுக்கீடு
Updated on
1 min read

சென்னை: மீனவர்களுக்கான குழு விபத்து இழப்பீடு பெறாத 205 குடும்பங்களுக்கு ரூ.4.10 கோடி இழப்பீடு வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட் டுள்ளது.

இதுகுறித்து மீன்வளத்துறை செயலர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மீனவர்களுக்கான குழு விபத்து காப்புறுதி திட்டம் செயல்படாத 2020 ஜூன் 1 முதல் 2021 அக்.18-ம் தேதி வரை உயிரிழந்த 205 மீனவர், மீனவ மகளிர் குடும்பங்களின் துயரை போக்கும் வகையில் விபத்து காப்புறுதி திட்டத்தின்கீழ் அக்குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் அறிவிப்பை கடந்த ஆக.18-ம் தேதி ராமநாதபுரத்தில் நடைபெற்ற மீனவர் நல மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி, 205 மீனவர், மீனவ மகளிர் குடும்பங்களுக்கு தலா ரூ.2லட்சம் வீதம் ரூ.4.10 கோடிக்கு நிர்வாக மற்றும் நிதி ஒதுக்கீடு வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in