Published : 12 Dec 2017 11:06 AM
Last Updated : 12 Dec 2017 11:06 AM
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மருதுகணேஷை ஆதரித்து வ.உ.சி நகர் மார்க்கெட் பகுதியில் நேற்று இரவு (திங்கள் இரவு) பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய வைகோ, "கழகங்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்று இந்துத்துவ சக்திகள் முழங்குகின்றன. இது பெரியார் பிறந்த மண். அண்ணா வாழ்ந்த மண் என்பதை அவர்களுக்கு நினைவூட்ட விரும்புகிறோம். இங்கு அவர்கள் ஒருபோதும் காலூன்ற முடியாது. பல்வேறு கலாச்சாரங்கள், நம்பிக்கைகள் கொண்ட இந்தியாவின் முதுகெலும்பாக திகழ்வது மதச்சார்பின்மை. அந்த மதச்சார்பின்மையை தகர்க்கும் முயற்சியில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு ஈடுபட்டு வருகிறது. இந்தியாவை இந்து நாடாக்குவோம் என்றெல்லாம் பேசி வருகின்றனர். இதற்கெல்லாம் திமுக முடிவு கட்டும்" எனப் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT