Published : 18 Jul 2014 08:32 AM
Last Updated : 18 Jul 2014 08:32 AM

கும்பகோணம் பள்ளித் தீ விபத்து வழக்கில் ஜூலை 30-ல் தீர்ப்பு

94 குழந்தைகள் பலியான கும்பகோணம் பள்ளி தீவிபத்து வழக்கில் வரும் 30-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் காசிராமன் தெருவில் ஒரு சிறிய கட்டிடத்தில் இயங்கி வந்த ஸ்ரீகிருஷ்ணா உதவி பெறும் தொடக்கப் பள்ளி, ஸ்ரீகிருஷ்ணா பெண்கள் உயர்நிலைப் பள்ளி மற்றும் சரஸ்வதி வித்யாலயா ஆங்கில நர்சரி- பிரைமரி பள்ளியில் கடந்த 2004, ஜூலை 16-ம் தேதி சத்துணவு சமைக்கும்போது ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி இறந்தனர். 18 பேர் பலத்த தீக்காயமடைந்தனர்.

இந்த வழக்கின் இருதரப்பு வாதம் வியாழக்கிழமை முடிவுற்றது. வரும் 30-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி முகமது அலி அறிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x