அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவை யார் விசாரிப்பது? - உயர் நீதிமன்றத்தில் செப்.4-ல் விசாரணை

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவை யார் விசாரிப்பது? - உயர் நீதிமன்றத்தில் செப்.4-ல் விசாரணை
Updated on
1 min read

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும் என முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழான இந்த வழக்கில் ஜாமீன் மனுவை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என தெரிவித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவி, இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தை அணுகி தெளிவுபடுத்த அறிவுறுத்தி இருந்தார்.

அதன்படி, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரும் மனுவை எந்த நீதிமன்றம் விசாரிப்பது என்பது தொடர்பாக செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு வரும் 4-ம் தேதி நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், கே.குமரேஷ்பாபு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in