Published : 22 Dec 2017 09:25 AM
Last Updated : 22 Dec 2017 09:25 AM
* வண்ணாரப்பேட்டை டி.எச்.சாலையில் உள்ள மாநகராட்சி பள்ளியில், காலை 9.20 மணிக்கு அதிமுக வேட்பாளர் மதுசூதனன் மற்றும் அவரது குடும்பத்தினர் வாக்களித்தனர். மதுசூதனன் வாக்களிப்பதை படம் எடுக்க தொலைக்காட்சி வீடியோகிராபர்கள் உள்ளே நுழைய முயன்றனர். அவர்களை போலீஸார் தடுத்ததால், காவல் துறையினருக்கும், பத்திரிகையாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து வாக்குச்சாவடியின் வாயிலில் அமர்ந்து பத்திரிகையாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
* காமராஜர் நகர் அரசு பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் (எண்.77), காலை 8.35 மணிக்கு மின்னணு இயந்திரத்தில் பழுது ஏற்பட்டது. 9.05 மணிக்கு பழுது சீரமைக்கப்பட்ட நிலையில், மீண்டும் 9.30 மணிக்கு பழுதானது. அந்த பள்ளியின் அருகிலேயே அமைந்துள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாற்று இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்ததால், புதிய இயந்திரம் கொண்டுவரப்பட்டது. இதனால், வாக்குப்பதிவு தாமதமானது. இதேபோல செரியன் நகரிலும் மின்னணு இயந்திரத்தில் பழுது ஏற்பட்டது. உடனடியாக சீரமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடந்தது.
* 2ஜி வழக்கில் சிக்கிய அனைவரையும் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுவித்தவுடன் திமுகவினர் ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட பல பகுதிகளில் பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அவர்களை போலீஸார் தொகுதிக்கு வெளியே பட்டாசு வெடிக்குமாறு கூறி அனுப்பி வைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT