Published : 24 Dec 2017 12:40 PM
Last Updated : 24 Dec 2017 12:40 PM
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் வெற்றி முகத்தை நோக்கி முன்னேறிவரும் நிலையில் இது குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக தொலைக்காட்சி சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், "ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்ட ஒருவர் வெற்றி பெற்றிருக்கிறார் என்றால் பணப் புழக்கம் எவ்வளவு தூரம் நடந்திருக்க வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
பாஜக பின்தங்கியிருக்கிறதே என்று நீங்கள் கேட்பதில் எந்த நியாயமும் இல்லை. ஏனெனில் தமிழகமே தன்மானத்தில் பின்தங்கியிருக்கிறது. அதிமுக, திமுக பின்தங்கியிருக்கின்றன.
இங்கு நடந்திருப்பது உண்மையான தேர்தலே இல்லை. அதில் பதிவானதும் வாக்குகளே இல்லை. அதனால் கருத்து சொல்வதற்கும் ஒன்றுமில்லை. கடைசி நிமிடம் வரை வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக எங்கள் வேட்பாளர் புகார் கூறினார். ரூ.20 நோட்டில் பணம் தருவதாக டிடிவி தினகரன் தரப்பினர் எழுதிக் கொடுத்திருக்கிறார்கள்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT