Published : 07 Dec 2017 10:12 AM
Last Updated : 07 Dec 2017 10:12 AM

ஸ்ரீபதி வேணுகோபால ஸ்வாமி கோயில் நிர்மாண நூற்றாண்டு விழா

ராயபுரம் என்ற சிற்றூரில் உள்ள ஸ்ரீபதி வேணுகோபால ஸ்வாமி கோயிலின் நிர்மாண நூற்றாண்டு விழா அண்மையில் நடைபெற்றது.

கும்பகோணம் - மன்னார்குடி மார்க்கத்தில், நீடாமங்கலத்துக்கும் மன்னார்குடிக்கும் இடையில், ராஜப்பையன்சாவடி என்ற இடத்துக்கு மேற்கில் பாமணி ஆற்றுக்கு மேற்கில் ராயபுரம் என்ற சிற்றூர் அமைந்துள்ளது. இந்த ஊரைச் சுற்றியிருந்த ஊர்கள் பசுக்கூட்டம் நிறைந்த தக்ஷிண கோகுலம் போல இருந்திருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.

வட மொழியில் `ராய' என்றால் `செல்வம்' என்று பொருள். பண்டைய காலத்தில் பசுக்கள்தான் சிறந்த செல்வமாக கருதப்பட்டதால் ராயபுரம் (செல்வம் நிறைந்த ஊர்) என்ற பெயர் பெற்றிருக்கலாம் என கருதப்படுகிறது. பசுக்கள் நிறைந்த இடமாக இருந்ததால்தான் ஸ்ரீ கிருஷ்ணனுக்கு பிற்காலத்தில் இங்கு கோயில் உருவாகியுள்ளது.

இத்தகைய பெருமை வாய்ந்த இத்திருக்கோயில் நிர்மாணித்து 100-வது ஆண்டு நிறைவு பெற்று கடந்த டிசம்பர் 4-ம் தேதி இக்கோயிலில் அருள்பாலிக்கும் ஸ்ரீபதி வேணுகோபால ஸ்வாமிக்கு ஸஹஸ்ர கலசாபிஷேகம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் இந்த விழாவில் பங்கேற்று சுவாமியை தரிசித்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் தா. அரவிந்தன் செய்திருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x