Published : 23 Dec 2017 09:52 AM
Last Updated : 23 Dec 2017 09:52 AM

டிசம்பர் 29-ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு: பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோயிலில் சிறப்பு ஏற்பாடு

சென்னை பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோயிலில் வரும் 29-ம் தேதி அதிகாலை 5 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியையொட்டி சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து கோவில் நிர்வாகம் நேற்று வெளியிட்ட செய்தி: சென்னை பெசன்ட் நகர் மகாலட்சுமி கோயிலில் (அஷ்டலட்சுமி கோயில்) வரும் 29-ம் தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு சுப்ரபாத சேவையும், 4.30 மணிக்கு சிறப்பு ஆராதனையும், 5 மணிக்கு ஆஸ்தான வாயி லில் சொர்க்கவாசல் திறப்பும் நடைபெறும். காலை 5 மணிமுதல் பக்தர்களின் தரிசனத்திற் காக சன்னதிகளின் நடை திறக்கப்படும்.

பக்தர்களின் வசதிக்காக வடக்கு பக்கம் நுழைவு வாயிலுக்கு முன்புறம் இருந்தே வரிசைகள் அமைக்கப்பட்டுள்ளன. கட்டணமில்லா சேவையும், கட்டணச் சேவையும் எவ்வித பாகுபாடும் இல்லாமல் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வழக்கமாக தைரியலட்சுமி சன்னதியில் நடைபெறும் அர்ச்சனைக்குப் பதிலாக ஆதிலட்சுமி, தான்ய லட்சுமி, தைரிய லட்சுமி ஆகிய மூன்று சன்னதி களிலும் அர்ச்சனை செய்து கொள்ளலாம். மற்ற சன்னதிகளில் தரிசனம் மட்டுமே செய்ய முடியும்.

வழக்கமான பூஜை நேரங்கள், சுத்தம் செய்யும் நேரங்கள் தவிர மற்ற நேரங்களில் அனைத்து சன்னதிகளிலும் பக்தர்கள் இடையூறின்றி தரிசனம் செய்ய தேவையான ஏற்பாடுகளும், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x