Published : 08 Dec 2017 06:23 PM
Last Updated : 08 Dec 2017 06:23 PM

சேகர் ரெட்டியின் டைரி பக்கங்களில் குறிப்பிடப்பட்டுள்ள அமைச்சர்களை பதவி நீக்கம் செய்க: ஜி.ராமகிருஷ்ணன்

சேகர் ரெட்டியின் டைரி பக்கங்களில் குறிப்பிடப்பட்டுள்ள அமைச்சர்களை உடனடியாக அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தனியார் ஆங்கில செய்தி தொலைக்காட்சி சேகர் ரெட்டியின் டைரியில் உள்ளவை என சில பக்கங்கங்களை வெளியிட்டுள்ளது. இந்தப் பக்கத்தில் உள்ள குறிப்புகளில் தமிழகத்தின் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உட்பட பல்வேறு அமைச்சர்களுக்கும், சில கட்சிகளின் தலைவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் பணம் கொடுத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சேகர் ரெட்டியின் டைரியில் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் அமைச்சர்களாக நீடிப்பதற்கு தார்மீக உரிமையற்றவர்களாக ஆகிவிடுகின்றனர்.

எனவே விசாரணை நடைபெற்று வரும் நிலையில், வெளிவந்துள்ள டைரி பக்கங்களில் குறிப்பிடப்பட்டுள்ள அமைச்சர்களை உடனடியாக அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டுமெனவும், சேகர் ரெட்டி மீதான வழக்கு விசாரணையை துரிதப்படுத்த வேண்டும்'' என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x