Published : 09 Dec 2017 10:51 AM
Last Updated : 09 Dec 2017 10:51 AM

மருதுகணேஷ், டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரச்சாரம்

ஆர்.கே.நகர் தொகுதியில் திமுக வேட்பாளர் மருதுகணேஷ், டிடிவி தினகரன் ஒன் றாக இணைந்து தேர்தல் பிரச்சாரம் செய்தனர்.

ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். அவருக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. நேற்று தண்டையார்பேட்டை நேதாஜி நகரில் டிடிவி தினகரன் தனது வேட்பாளர்களுடன் தேர்தல் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார்.

அதே பகுதியில் திமுக வேட்பாளர் என்.மருதுகணேஷ் ஆதரவாளர்களுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பின்னர் இருவரும் ஒன்றாகச் சென்று நேதாஜி நகர் 3-வது தெருவில் உள்ள இஸ்லாமியர்களிடம் வாக்கு சேக ரித்தனர்.

அந்த தெருவில் உள்ள பள்ளி வாசலில் தொழுகை முடித்துவிட்டு வருபவர்களிடம் வாக்கு சேகரிப்பதற்காக, பள்ளிவாசலின் வாயிலின் வலது புறத்தில் டிடிவி தினகரன் ஆதரவாளர்களுடனும், இடது புறத்தில் மருதுகணேஷ் ஆதரவாளர்களுடனும் நின்றனர்.

தொழுகை முடித்துவிட்டு வந்தவர்களிடம் இருவரும் குக்கர் மற்றும் உதய சூரியனைக் காண்பித்து வாக்கு சேகரித்தனர்.

முன்னதாக அப்பகுதிக்கு வந்த கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூவை, டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் தெர்மாகோல் தெர்மாகோல் என்று கோஷமிட்டு கேலி கிண்டல் செய்தனர். இதையடுத்து அமைச்சர் செல்லூர் ராஜூ உடனடியாக காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x