

சென்னை: "உதகையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த குடும்ப நிகழ்வுக்கான முழு செலவையும் ஆளுநர் ஏற்றுள்ளார். பொறுப்பற்ற முறையில் ஆளுநர் குறித்து திமுக எம்.பி தயாநிதி மாறன் பேசுவது கண்டனத்துக்குரியது" என்று ஆளுநர் மாளிகை கண்டனம் தெரிவித்துள்ளது
இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக ஆளுநரின் குடும்ப விழாவில் அரசு பணம் பயன்படுத்தப்பட்டதாக மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் பொதுவெளியில் குற்றம்சாட்டியதாக மேற்கோள்காட்டி ஆகஸ்ட் 24-ம் தேதியன்று சில ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அந்த தகவல்கள் தவறானவை என்பதுடன், விபரீதமான மற்றும் தவறான நோக்கம் கொண்டவை என்பதால், நடந்தவை பொது வெளியில் அறியப்பட வேண்டும். நடந்த உண்மைகள்:
ஆளுநர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கான உணவுக்கு கூட ஒவ்வொரு மாதமும் கட்டண ரசீது வழங்கப்படுகிறது. அதை ராஜ் பவன் செலுத்த உரிமையிருந்தாலும் அந்த செலவினத்தையும் ஆளுநரே ஏற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆளுநர் மீது அவதூறு கற்பிக்கும் விதமாக மக்களவை உறுப்பினரை மேற்கோள்காட்டி வெளியான பொறுப்பற்ற மற்றும் விபரீத தகவல் மிகவும் கண்டிக்கத்தக்கது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.