Published : 29 Dec 2017 05:01 PM
Last Updated : 29 Dec 2017 05:01 PM

இரட்டை இலையை வாங்கிக் கொடுக்கலாம்;வாக்குகளை வாங்கித்தர முடியுமா?- ஆடிட்டர் குருமூர்த்திக்கு தினகரன் கேள்வி

அதிமுகவில் உள்ள ஐந்தாறு பேர் குருமூர்த்தியிடம் கைகட்டி சேவகம் செய்தனர். குருமூர்த்தி இரட்டை இலையை வாங்கிக் கொடுத்தால் மட்டும் போதுமா? மக்களிடம் வாக்குகளை குருமூர்த்தியால் வாங்கி கொடுக்க முடியுமா? என்று தினகரன் கேள்வி எழுப்பினார்.

ஓபிஎஸ் ஈபிஎஸ்ஸை ஆடிட்டர் குருமூர்த்தி விமர்சனம் செய்தது பற்றி தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் கூறியதாவது:

ஆடிட்டர் குருமூர்த்தி ஆர்.எஸ்.எஸ்.ஸை சேர்ந்தவர். அவருக்கும் அதிமுகவுக்கும் என்ன சம்பந்தம். நான் சொன்ன அந்த ஐந்தாறு பேர் அவரிடம் கைகட்டி சேவை செய்ததால் அவர்களின் கூடா நட்பு கேடாக விளைந்தது. தினகரனை, சசிகலாவை கட்சியை விட்டு நீக்கி வைக்கலாம், கட்சி சின்னத்தை குருமூர்த்தி வாங்கி கொடுக்கலாம். ஆனால் மக்களிடம் வாக்குகளை வாங்கித்தர குருமூர்த்தியால் முடியாது. யாராலும் முடியாது. இவர்களால் முடியவில்லை என்பதால் குருமூர்த்தி கோபத்தை இவர்களிடம் காட்டுகிறார்.

டிச. 5 வரை குருமூர்த்திக்கும் அதிமுகவுக்கும் இல்லாத சம்பந்தம் பின்னர் ஆட்சியே அவரைக் கேட்டுத்தான் நடக்கிறது என்ற தகவல் வருகிறது. இப்போது நீங்கள் ஐந்தாறு பேர் இறுதித் தருவாய்க்கு வந்து விட்டீர்கள். இனியாவது திருந்துங்கள். திருந்தாவிட்டால் வருங்காலத்தில் துரோகிகள் என்று சின்னம் குத்தப்படும்போது உங்கள் ஐந்தாறு பேர் படத்தைத்தான் போட வேண்டியிருக்கும். இவ்வாறு தினகரன் பேட்டி அளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x