Published : 02 Dec 2017 10:17 AM
Last Updated : 02 Dec 2017 10:17 AM
ஒக்கி புயலின் தாக்கத்தால் 2 நாட்களாக பெய்த கனமழை திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களை உலுக்கியது. நீராதாரங்கள் நிரம்பி, பல கிராமங்கள், சாலைகள் வெள்ளத்தால் சூழப்பட்டன. மின்விநியோகம் இல்லாமல் இருளில் தவிக்கிறது குமரி மாவட்டம்.
திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி, கடனா நதி, கருப்பா நதி, பச்சையாறு, நம்பியாறு, அனுமன் நதி, கன்னியாகுமரி மாவட்டத்தில் பழையாறு, தாமிரபரணி, பரளியாறு, வள்ளியாறு போன்றவற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாநகரில் தபால் தந்தி காலனி, கதிர்வேல் நகர், பாக்கியலெட்சுமி நகர், ராஜபாண்டி நகர், மணிநகர், திரேஸ்புரம், பூபாலராயர்புரம், ஸ்டேட் பாங்க் காலனி, முத்தம்மாள் காலனி போன்ற தாழ்வான பகுதிகளில் தெருக்களில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியது. இதனால், மக்கள் வெளியே வர முடியாமல் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கி கிடந்தனர். தாமிரபரணி வெள்ளத்தால் ஆத்தூர், முக்காணி, ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி போன்ற தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT