Published : 11 Dec 2017 10:07 AM
Last Updated : 11 Dec 2017 10:07 AM
தண்டையார்பேட்டையில் சிதிலமடைந்த நிலையில் உள்ள புறநகர் அரசு மருத்துவனையை சீரமைப்பேன் என திமுக வேட்பாளர் மருது கணேஷ் வாக்குறுதி அளித்துள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மருது கணேஷ், தண்டையார்பேட்டை சேனியம்மன் கோயில் தெரு, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, ரெட்டை குழி தெரு உள்ளிட்ட இடங்களில் நேற்று வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். அவருக்கு ஆதரவாக முன்னாள் மத்திய அமைச்சர்டி.ஆர்.பாலு, சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் சேகர்பாபு உள்ளிட்டோர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது வாக்காளர்களிடம் பேசிய மருது கணேஷ், “தண்டையார்பேட்டை புறநகர் அரசு மருத்துவமனை மிகவும் சிதிலமடைந்த நிலையில் இருக்கிறது. போதிய மருத்துவர்களோ, பரிசோதனை வசதிகளோ இல்லை. அங்கு அனுமதிக்கப்படும் நோயாளிகள் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்படுகின்றனர். என்னை வெற்றி பெறச் செய்தால் அந்த மருத்துவமனையை சீரமைப்பேன். மழை பெய்தால் கைலாசம் தெருவில் உள்ள குடியிருப்புவாசிகள் மிகுந்த அவதிக்கு உள்ளா கின்றனர்.
எனவே, தேர்தலில் வெற்றி பெற்றால் இங்குள்ள மக்களுக்கு நிரந்தர வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுப்பேன்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT