Published : 26 Dec 2017 09:49 PM
Last Updated : 26 Dec 2017 09:49 PM
உயர்நீதிமன்றத்தில் போலியான ஆவணங்கள் அளித்தது, புகார்தாரரை மிரட்டியதாக நடிகர் மன்சூர் அலிகான் மீது அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சூளைமேடு போலீஸார் நடிகர் மன்சூர் அலிகான் மற்றும் அவரது மனைவி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை சூளைமேட்டில் அப்பாவு என்பவருக்கு சொந்தமான 3375 சதுர அடி நிலத்தை நடிகர் மன்சூர் அலிகான் ஆள்மாறாட்டம், விரல்ரேகை மோசடி செய்து நில அபகரிப்பு செய்ததாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.
கடந்த 2003-ம் ஆண்டு நடைபெற்ற இந்த வழக்கில் 2012-ம் ஆண்டு நடிகர் மன்சூர் அலிகானும், அவரது மனைவி அபிதா பானு நீதிமன்றத்தில் எதிர் பிரமாண வாக்குமூலம் போலியாக தயாரித்து தாக்கல் செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை அடுத்து நீதிமன்றமே நடிகர் மன்சூர் அலிகான், அவரது மனைவி அபிதா பானு ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது. மேலும் இது தொடர்பாக மன்சூர் அலிகான் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அப்பாவுவின் மகன் பாரி, சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து 447, 420, 468, 471, 506(1) மோசடி, கொலை மிரட்டல் என 5 பிரிவுகளின் கீழ் நடிகர் மன்சூர் அலிகான் அவரது மனைவி அபிதா பானு மீது சூளைமேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT